பாமக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்த கே.பாலுவை நீக்கம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கடந்தாண்டு நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். ஆனால், மேடையில் வைத்தே அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதான் பிரச்சனையில் ஆரம்ப புள்ளி. பின்னர், இதைத்தொடர்ந்து பாமகவில் அவ்வப்போது சலசலப்பு எழுந்து […]
இந்தியாவில் மிகப்பெரிய தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நாட்டில் ஒரு புதிய தங்கச்சுரங்கம் செயல்படத் தொடங்க உள்ளது. எங்கு தெரியுமா? இந்தியாவில் நிலத்தடியில் அதிக தங்க இருப்பு இல்லை, அதனால்தான் வேறு சில நாடுகளைப் போல இங்கு தங்கம் பெரிய அளவில் காணப்படவில்லை. ஆனால் சமீபத்தில், இந்தியாவில் மிகப்பெரிய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, ஒரு புதிய தங்கச் சுரங்கம் செயல்படத் தொடங்க […]
ஒரு விலங்கு எந்த மனித நண்பனுடனும் பிணைப்பை ஏற்படுத்தும்போது, அவற்றின் அன்புக்கு எல்லையே இல்லை. ஜார்க்கண்டில் உள்ள தியோகர் மாவட்டத்தில் உள்ள பிரம்சோலி கிராமத்தில் இருந்து இதுபோன்ற ஒரு காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னா சிங் என்பவர் சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தபோது, அவரின் வீட்டில் அவரது உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் அனைவரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி […]
18 ஆண்டுகள் கழித்து தங்கள் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்று வரலாறு படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் உரிமையை விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியின் தற்போதைய உரிமையாளர்கள் டியாஜியோ பிஎல்சி, அணியை முழுமையாகவோ அல்லது ஓரளவாகவோ விற்க திட்டமிட்டுள்ளனர் என்று வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. RCB அணியை இந்தியாவில் இயக்கி வரும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம், முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ப்ளூம்பெர்க் வெளியிட்ட […]
மீண்டும் ஏன் கோவிட் பரவுகிறது? புதிய அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக, ஆசியாவின் சில பகுதிகளில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் கோவிட் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. இந்தியா இன்னும் ஒரு பெரிய புதிய அலையைப் பதிவு செய்யவில்லை என்றாலும், ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் கவலையைத் தூண்டுகின்றன. இந்தியாவின் தற்போதைய அதிகாரப்பூர்வ எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. […]
நடப்பாண்டில் நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. ஐபிஎல் கோப்பையை வெல்வது 18 வருட கனவு என்பதால், இந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாட ஆர்சிபி அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவின் விதான் சவுதா முதல் சின்னசாமி மைதானம் வரை ஐபிஎல் கோப்பையும், பேரணி நடத்துவதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், அங்கு போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு […]
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் தினமும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பு […]
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாஜகவுக்கு 50 தொகுதி, விஜய்க்கு 50 தொகுதி என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த், நடிகர் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்து, அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், மிகப்பெரிய தோல்வியைத்தான் சந்தித்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட மாட்டார் என்று சொல்லப்பட்டது. முதல்வர் ஆசை விஜய்க்கும், […]
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான (COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2024) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 453 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 17.06.2025க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை – 453 காலியிட விவரம்: Indian Military Academy – 100 Indian Naval Academy – 26 Air Force Academy – 32 Officers’ […]
”உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை.. ஆனால், விந்தணு தானம் மூலம் மட்டும் குழந்தையை பெற்றுக் கொள்ளாதீர்கள்” என்று சமூக வலைதளத்தில் ஒரு பெண் கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார். ரெடிட் சமூக வலைதளத்தில் பெண் ஒருவர், “விந்தணு தானம் பெற்று நானும் எனது கணவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். முதலில் எனது கணவர் குழந்தையை பாசத்துடன் வளர்த்து வந்தார். ஆனால், குழந்தைக்கு 2 வயது ஆனவுடன், […]