இந்தியாவில் திருமணம் செய்வதற்குரிய சட்டப்பூர்வ வயதை (ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18) இன்னும் எட்டாத நிலையிலும், பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய வயது வந்த இருவரும் லிவ்-இன் உறவில் சேர்ந்து வாழலாம் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஒருவரின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை, அவர் திருமண வயதை எட்டவில்லை என்ற காரணத்துக்காக மறுக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. கோட்டாவைச் சேர்ந்த 18 வயது […]

குளிர்காலம் வந்துவிட்டாலே சில உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம்.. ஏற்கனவே சில வகையான நோய்களைக் கொண்டவர்களுக்கு இது அதிக சிக்கல்களைக் கொண்டுவரும். குறிப்பாக தசைகள் மற்றும் மூட்டுகள் விறைப்பாக மாறுவதால், இந்த பருவத்தில் மூட்டுவலி, மூட்டு வலி மற்றும் வாத நோய் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும். குளிர்காலத்தில் அவர்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் குறித்து அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மூட்டு வலி உள்ளவர்கள் இந்த பருவத்தில் தேநீர் […]

விழுப்புரம் அருகே புதுச்சேரி எல்லையில் உள்ள மடுகரை பகுதியில், தன்னுடைய மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த சக ஊழியரை, கணவரே மது அருந்த அழைத்துச் சென்று கழுத்தைக் கிழித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் குமார் என்பவர், தன் குடும்பத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையான மடுகரை பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் பிளைவுட் […]

கடந்த செவ்வாய் கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் குழப்பம் தொடரும் நிலையில், இன்னும் இன்டிகோ விமான சேவையைச் சுற்றி செயல்பாட்டு பிரச்சினைகள் நீடித்து வரும் காரணத்தால், கடந்த 3 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை, சமூக வலைதளங்களில் வந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில், இண்டிகோ கவுண்டர்களின் முன் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.பல பயணிகள் தங்கள் விமானங்கள் தாமதமாவது, ரத்து […]

இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo), கடந்த நான்கு நாட்களாகத் தொடரும் விமான ரத்து மற்றும் தாமதங்களால் பயணிகளைப் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இன்றும் (வெள்ளிக்கிழமை) டெல்லி மற்றும் திருவனந்தபுரம் உட்பட பல முக்கிய விமான நிலையங்களில் இருந்து புனே போன்ற நகரங்களுக்குச் செல்லவிருந்த 6E 2343, 6E 2471 மற்றும் 6E 6692 உள்ளிட்ட சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோவின் இந்தச் செயல்பாட்டுச் […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. தற்போது, ரெப்போ விகிதம் 5.50% ஆக உள்ளது. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25% ஆக செய்துள்ளது. […]

தற்போது நிலவும் அதிகக் குளிர் காரணமாக முதியோருக்கு ‘முகவாதம்’ (Facial Paralysis) எனப்படும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிவகங்கை அரசுப் பொதுநல மருத்துவர் அ.ப.பரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார். முகவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். முகவாதம் என்றால் என்ன? முகத்திற்கு உணர்வை அளிக்கும் முக நரம்பில் ஏற்படும் அழுத்தம், அழற்சி அல்லது வைரஸ் தொற்று போன்றவற்றால் உருவாகும் பாதிப்புதான் […]