fbpx

லிப்-லாக் சேலஞ்ச் என்ற போட்டி ஏற்பாடு செய்த 8 மாணவர்கள் மீது கர்நாடக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நண்பர்கள் முன்னிலையில் ஒரு இளைஞர் பள்ளி மாணவிக்கு முத்தமிடும் வீடியோ வைரலானதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய போலீசார், மாணவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்ததாக தெரிவித்தனர். […]

கள்ளக்குறிச்சி மாணவி உடலை நாளை பெற்றுக் கொள்வதாக பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதனிடையே மாணவியின் மரணத்தில் உள்ள உண்மை கண்டறிய வேண்டும், மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மருமகனை, தண்டனையிலிருந்து காப்பாற்றியுள்ளார் மாமியார். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு மாமியார் வீட்டில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி, வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து, தனது மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார். இதையடுத்து, மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் […]

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவை சேர்ந்த ரமணா என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.. கோவை வெள்ளையங்கிரி மலையடிவாரத்தில் சத்குருவின் ஈஷோ யோகா மையம் அமைந்துள்ளது.. இங்கு பிரம்மாண்டமான சிவபெருமான சிலை நிறுவப்பட்டுள்ளது.. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர்.. அந்த வகையில், ஆந்திராவை சேர்ந்த 28 வயதான ரமணா என்ற நபர் மன அழுத்தம் காரணமாக யோகா பயிற்சி மேற்கொள்ள ஈஷா […]

அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”சொத்து வரி, மின்சாரம், பால் என அனைத்தையும் விலை உயர்த்தியதுதான் திமுக அரசின் சாதனை. தவறை சுட்டிக் காட்டினாலும், பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அரசு இந்த திமுக அரசு. மக்கள் தான், இந்த விடியா அரசை கேள்வி கேட்க வேண்டும். […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.37,328-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து […]

மின் கட்டண உயர்வுக்கு ஒன்றிய அரசும், முந்தைய அதிமுக அரசும் தான் காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 18-ம் தேதி அறிவித்தார்.. எனினும், வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக […]

அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், மொத்தம் 92.71 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவனந்தபுரம் முதல் இடத்தையும், பெங்களூரு 2ஆம் இடத்தையும், […]

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளதாக எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.. போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதுடன், மாணவர்களின் சான்றிதழ்களை தீ வைத்து எரித்தனர்.. இந்த விவகாரத்தில் […]

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதைத் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அவரது ஆதரவாளர்கள் வீட்டிற்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, அதிமுக அலுவலகம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் […]