ஆசியாவின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வானிலையின் காரணமாக, இதுவரை சுமார் 1,000-க்கும் உயிரிழந்துள்ளனர். கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் மற்றும் பருவமழை தாக்கம் : இந்தோனேசியா, இலங்கை, தெற்கு தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் பொதுவாக இந்த நேரத்தில் வடகிழக்குப் பருவமழையால் கனமழை பொழியும். இந்தக் காலத்துடன் 3 வெப்பமண்டலச் […]

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் ‘டிட்வா’ புயலின் கடுமையான தாக்கம் காரணமாகக் காய்கறி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்த நிலையில், அவற்றின் விலைகள் திடீரெனச் சரமாரியாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்று காய்கறிப் பயிர்கள் மோசமாகச் சேதமடைந்தன. குறிப்பாக, காய்கறிப் […]

தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 1) முதல், சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் புதிய இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களைப் பதிவு செய்வதற்காக, அவற்றை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கோ (RTO) அல்லது யூனிட் அலுவலகங்களுக்கோ நேரில் கொண்டு வர வேண்டியதில்லை என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 150-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கே ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, சாலை […]

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 10.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பால் வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய விலை விவரங்கள் : இந்த விலை குறைப்பு சென்னை மட்டுமல்லாமல், டெல்லி, […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை நேரில் தரிசிப்பதற்கான கட்டண அனுமதிச் சீட்டுகள் இன்று (டிசம்பர் 1) காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் பதிவு விவரங்கள் : வரும் டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் […]

திண்டுக்கல்லில் சுமார் 22,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார் ‌. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) போது, ஏறக்குறைய 7,227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.சுமார் 26 வாக்குச்சாவடிகளில் இந்த முறைகேடு நடைபெற்றிருக்கிறது. இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர். சின்னாளப்பட்டி […]

சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களால் அரசுக்கு ஏற்படும் இழப்பினை உடனுக்குடன் கண்டறியும் வகையில் இணைய வழியில் உள் தணிக்கை செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பதிவுத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; பதிவுத்துறையால் ஆவணப்பதிவு உள்ளிட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சேவைகளும் முழுமையாக கணினி மூலம் இணைய வழி பயன்பாட்டிற்கு கொண்டு வர STAR 2.0 Module. 13.02.2018 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. […]