பஞ்சாப் போலீசார் பாகிஸ்தான் உளவுத்துறை Inter-Services Intelligence (ISI) ஆதரவில் செயல்பட்டதாக கூறப்படும் கையெறி குண்டு தாக்குதல் சதி குழுவை கண்டுபிடித்துள்ளனர். இந்த சதி தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானில் உள்ள ஹாண்ட்லர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்ததாகவும், பஞ்சாபில் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடத்தில் கைக்குண்டு வீசி பதட்டத்தை ஏற்படுத்துமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப் காவல் துறை இயக்குநர் (DGP) கௌரவ் யாதவ் […]

உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களை (AI Chatbot) நம்பியிருக்கும் நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார ஆலோசனைகளுக்கு இவற்றை தவிர்ப்பது அவசியம் என ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செயலிழப்பு : சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், 30 வயதுப் பெண் ஒருவர், தனக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகத்தை இழந்துள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு சுமார் 7 […]

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம், இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என பிரதானமாக 4 முனைப் போட்டி நிலவும் சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன. தற்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க., தனது வலுவான கூட்டணிக் கட்டமைப்பை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, எதிர்வரும் தேர்தலிலும் ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்ற நம்பிக்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மறுமுனையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், எந்தக் […]

புதிய அறிவியல் ஆய்வு ஒன்று, நாஜி அதிபர் அடால்ஃப் ஹிட்லரின் உடல் மற்றும் மரபணு (ஜெனெடிக்) நிலைகளைக் குறித்து பல தசாப்தங்களாக பேசப்பட்டு வந்த வதந்திகளை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வில், ஹிட்லர் Kallmann Syndrome எனப்படும் ஒரு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, மிகக் குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மற்றும் சிறிய ஆண்குறியை ஏற்படுத்தக்கூடிய கோளாறு. இந்த கண்டுபிடிப்புகள் “Hitler’s DNA: Blueprint of […]

பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வி. மைத்ரேயன், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு கட்சிகளில் பயணித்து, தற்போது திமுகவில் முக்கிய பதவியைப் பெற்றுள்ளார். மைத்ரேயன் தனது அரசியல் பயணத்தை 1991 ஆம் ஆண்டு பாஜகவில் தொடங்கினார். 1999 ஆம் ஆண்டு வரை அக்கட்சியில் பணியாற்றிய அவர், பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுகவில் இணைந்தார். 2002 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]