விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், கொள்ளை முயற்சியை தடுக்க முற்பட்ட இரு கோவில் காவலர்கள், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், நேற்று இரவு காவலர்களான பேச்சிமுத்து (50) மற்றும் சங்கரபாண்டியன் (65) ஆகியோர் இரவுப் பாதுகாப்புப் […]

டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்புக்கு 3 வாரங்களுக்கு முன்பு, தீவிரவாத அமைப்பு ஜெயிஷ் இ அகமது அமைப்பை ஆதரிக்கும் போஸ்டர்கள் இன்காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் விசாரணை தொடங்கினர். அந்த விசாரணை உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் தேசிய தலைநகரம் டெல்லி வரை விரிந்தது. இந்த விசாரணையின் மூலம், தீவிரவாத ஆட்சேர்ப்பு முறையில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றம் வெளிச்சத்துக்கு […]

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு மறுத்ததால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஹாவேரி மாவட்டம் சங்கரி கொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து பரவன்னவர் (25). இவர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சரத் நீலப்பா என்ற வாலிபரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமண ஆசை வார்த்தைகள் […]

பாகிஸ்தான் நாடு வரலாறு காணாத மிக மோசமான சமூக மற்றும் பொருளாதார சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, அந்நாட்டின் முக்கியச் சேவை அமைப்பான ஜேடிசி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சையத் ஜப்பார் அப்பாஸ் அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டுப்பாடற்ற வேலையின்மை, பணவீக்கம் மற்றும் வறுமை ஆகிய காரணிகளால் நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கராச்சியில் உள்ள படித்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் துயரத்தைப் பற்றிப் பேசிய […]

தனது கணவர் தர்மேந்திராவின் மரணம் குறித்து பரவிய வதந்திகள் குறித்து நடிகை ஹேம மாலினி மௌனம் கலைத்தார்.. கடந்த வாரம் மூச்சுத் திணறல் காரணமாக 89 வயதான தர்மேந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், இன்று காலை அவர் மரணமடைந்தார் என்ற தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. இதனைத் தொடர்ந்து, தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் விளக்கம் அளித்து, தனது தந்தையின் உடல் நிலை நிலையாகவும், நலம்பெற்று வருவதாகவும் கூறினார். […]

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில், திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்த ஒரு இளம்பெண், கள்ளக்காதல் விவகாரத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம், திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி (28). இவருக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த சுவாதி, துண்டிகல் என்ற இடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் […]

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர் முகமதுவின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று மாலை செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் i20 காரை உமர் வைத்திருந்தார். யார் இந்த உமர்? ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் 1989 பிப்ரவரி 24 அன்று பிறந்த உமர், அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட “வெள்ளை […]