ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

மூளை பக்கவாதம் என்ற வார்த்தையை நாம் பலமுறை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பலருக்கு அதைப் பற்றிய சிறிதளவு புரிதல் கூட இல்லை. இதன் காரணமாக, மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதைச் சரிபார்க்க, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 அன்று உலக பக்கவாதம் தினம் ஏற்பாடு செய்யப்படுகிறது. மூளை பக்கவாதம் ஒரு தீவிர மருத்துவ அவசரநிலை. மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் துண்டிக்கப்படும் போது […]

தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதை முன்கூட்டியே தெரிவிக்க முடியாது. எனினும் விரைவில் அறிவிப்பேன் என அன்புமணி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி; மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாமல் பெயர் மட்டும் வைத்து, திமுக விளம்பர ஆட்சி நடத்துகிறது. நல்ல திட்டங்களை செயல்படுத்த முதல்வருக்குத் தெரியவில்லை.திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பாதியளவு கூட நிறைவேற்றவில்லை. […]

மூன்றாம் வகுப்பு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது . இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் கல்வியின் அத்தியாவசியக் கூறுகளாக செயற்கை நுண்ணறிவு மற்றும் கணக்கீட்டு சிந்தனையை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தேசிய […]

விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் விதைகள் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்: விவசாயிகளை உற்பத்தியாளர்களாகவும், தொழில்முனை வோராகவும், வர்த்தகர்களாகவும் உருவாக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக பயனடை முடியும் என்று தெரிவித்தார். விவசாயிகளின் நலன் கருதி ஒருங்கிணைந்த வேளாண் நடைமுறைகளில் மத்திய அரசு […]