இலவச மடிக்கணினிகள் வழங்குவதில் எதற்கு இத்தனைப் பாகுபாடுகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே..? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது 20 லட்சம் தமிழக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்கப்படும் என்று கூறி சுமார் ரூ.2,000 கோடியை ஒதுக்கிய திமுக அரசு, தற்போது வெறும் 10 லட்ச மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்குவதற்கான […]

தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குற்றச் சம்பவங்களில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதுதான் ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பட்டப்பகலில் அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், […]

பயிர் பாதிப்பை கணக்கெடுத்து டிசம்பர் இறுதிக்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மழை காரணமாக தற்போதைய நிலவரப்படி 68,226 ஹெக்டேர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும், அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பயிர் சேத நிலைகளுக்கு ஏற்ப உரிய […]

தமிழகத்​தில் கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உள்​ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக, புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக் […]

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்தது.. இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும். மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு […]

தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்களுக்கு மத்தியில் நேற்று நள்ளிரவு முதல் புதன்கிழமை மாலை வரை, டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) இருந்து 38 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான குழு பற்றாக்குறை காரணமாக இண்டிகோ நிறுவனத்தின் 70-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் பெங்களூருவிலிருந்து 42 விமானங்களும், மும்பையிலிருந்து 32 விமானங்களும் அடங்கும். இந்த திடீர் ரத்துக்களும் தாமதங்களும் காரணமாக, இந்தியாவின் […]

2026 புத்தாண்டு விரைவில் வருகிறது. பொங்கல் சங்கராந்தி பண்டிகைகளும் தொடர்ச்சியாக வருகின்றன. இந்த நேரத்தில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. வழக்கமாக, பண்டிகைகளின் போது சமையல் எண்ணெயின் விலை அதிகரிக்கும். ஆனால் இப்போது எண்ணெய் விலை குறைய வாய்ப்பு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.. பாமாயிலுக்கான முழு தேவை: நவம்பரில், நம் நாட்டிற்கான பாமாயில் இறக்குமதி சற்று அதிகரித்தது. சோயாபீன் மற்றும் சூரியகாந்தி […]

நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது.. இந்த கோயிலின் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. தீபத்திருவிழா உற்சவத்தின் 10-வது நாளான இன்று மகா தீப திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.. இந்த விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள்  நடைபெற்றது.. தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் மூலவர் […]