இந்தியா, கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சில இடங்களில் இன்னும் நரபலி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள் போன்ற விஷயங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, 2014 முதல் 2021 வரை, இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட நரபலிகள் மற்றும் 397 சூனியம் தொடர்பான கொலைகள் நடந்துள்ளன. இவ்வளவு ஏன், கல்வியில் சிறந்து விளங்கும் கேரளாவில், பணக்காரனாக வேண்டும் […]

நாம் அன்றாட உணவில் அதிகம் பயன்படுத்தாத ஒரு பொருள் காராமணி. ஆனால், இதில் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பல வைட்டமின்கள் இதில் உள்ளன. இந்தச் சிறிய தானியம் நமக்கு எந்தெந்த விதங்களில் உதவுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். எடை குறைப்பு மற்றும் ரத்த சோகை : காராமணியில் உள்ள நார்ச்சத்து, வயிறை நீண்ட நேரம் நிறைவாக […]

ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருட்களின் விலைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜிஎஸ்டி எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரிகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருட்களின் விலைகளை கணிசமாக குறைத்திருக்கும் நிலையில், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் அத்தகைய விலைக் குறைப்பை செய்யாமல் உயர்த்தப்பட்ட விலைகளிலேயே […]

இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில், குறைந்தது ஒரு பிளாஸ்டிக் நாற்காலியாவது இருக்கும். இந்த நாற்காலிகளின் பின்புறத்தில் உள்ள துளைகளை நாம் பெரும்பாலும் கவனித்திருக்கிறோம். அந்த துளைகள் வெறுமனே வடிவமைப்பிற்காக இருக்கலாம் என நாம் நினைப்பதுண்டு. ஆனால், அந்தச் சிறிய துளைகளுக்குப் பின்னால் பல முக்கியக் காரணங்கள் உள்ளன. நாற்காலிகளை அடுக்கி வைக்க எளிமை : பிளாஸ்டிக் நாற்காலிகளை அடுக்கி வைக்கும்போது, அவற்றின் இடையே காற்று சிக்கிக்கொள்ளும். இதனால் ஏற்படும் வெற்றிட விளைவால், […]

காலையில் புன்னகையுடன் ஒருவரைச் சந்திப்பது ஒரு சிறந்த நாளுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு காலையிலும் புன்னகையுடன் தொடங்கினால், உங்கள் வாழ்க்கையில் பல ஆண்டுகளைச் சேர்க்கலாம். சரி, இந்த செய்தியைப் படிக்கத் தொடங்குவதற்கு முன், சிரிப்பதற்கும் உங்கள் நிதி நிலை அல்லது செல்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் உலகில் மக்கள் அதிகம் சிரிக்கும் நாடுகள் அனைத்தும் ஏழைகளாகக் கருதப்படுகின்றன. எனவே, நாள் […]

திமுகவை கண்டித்து சட்டமன்ற தொகுதி வாரியாக பாஜக சார்பில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் வினோஜ் பி செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் மலிவு, பல்கிப் பெருகியுள்ள போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு என சகல விதத்திலும் தோல்வி அடைந்த ஆட்சியை திமுக அரசு நடத்தி வருகின்றது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழக […]

இளநீர், உடலுக்கு நீரேற்றத்தையும், புத்துணர்வையும் தரும் ஓர் அற்புதமான பானம். இது உடலை நச்சு நீக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இத்தகைய ஊட்டச்சத்து நிறைந்த இளநீரின் பலன்களை அதிகரிக்க, அதனுடன் சில பொருட்களை சேர்த்து அருந்தலாம். தேன் : இளநீரில் தேன் சேர்த்து அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நொதிகள், உடலில் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட […]

கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காதவர் என பிரதமர் மோடிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம். இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு நிமிர்ந்து நிற்கும் வகையில் முதுகெலும்பைக் கொடுத்தவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா; ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பற்றி பிரதமர் திரு மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. வரலாற்றுச் […]