தலைநகர் டெல்லியில் 350 ரூபாய் பணத்திற்காக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் ஜந்து மஸ்தூர் காலனி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. நேற்று இரவு 11 மணி அளவில் அந்தப் பகுதி வழியாக வந்து கொண்டு இருந்த இளைஞர் ஒருவரை வழிமறித்த சிறுவன் தனக்கு பணம் தருமாறு கேட்டு இருக்கிறான். இதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி. இவர், தோலிகட் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை படித்தார். இந்தியாவின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையையும் பெற்றார். கேரளாவில் நீதிபதியாக பணியாற்ற பின் பெருமை மிகுந்த உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது கருணாநிதியின் […]

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1,000 கிடைக்காதவர்கள் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகின்றனர். இதுவரை மேல்முறையீடு செய்யப்பட்டு புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் நவம்பர் மாதம் முதல் இத்திட்டத்தில் மேலும் இணைக்கப்பட்டு தற்போது மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், நிராகரிக்கப்பட்ட […]

சிவகங்கை மாவட்டத்தில் கணவரிடம் கோபித்துக் கொண்ட மனைவியை வீட்டிற்கு அழைத்து வர எதிர்ப்பு தெரிவித்த மாமியாரை குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் மகாதேவி தம்பதியரின் மூன்றாவது மகளான ஆர்த்தியை மணப்பாறையைச் சேர்ந்த பிரபு என்ற 28 வயது இளைஞனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு […]

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி, திருப்பூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை […]

விஜயகாந்த் நலமுடன் உள்ளதாகவும், தேவைப்படும் போது மட்டும் அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சனிக்கிழமை இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் இதுதொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, பல நடிகர்கள் மற்றும் […]

பிக்பாஸ் இல்லத்தில் நடிகை விசித்ரா தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்துப் பகிர்ந்து கொண்ட பிறகு, தற்போது நடிகை ராதிகா ஆப்தேவும் பாலியல் சீண்டல் குறித்து பேசியிருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் நடிகை விசித்ரா, சினிமா படப்பிடிப்புத் தளத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரால் தனக்கு நேர்ந்த கசப்பான பாலியல் அத்துமீறல் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் அது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாதான் என ரசிகர்கள் பகிர்ந்து […]

2023ஆம் ஆண்டு முடிந்து 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. திருமணம் நடைபெறுமா? நல்ல வேலை கிடைக்குமா? சொந்த வீடு வாங்கலாமா? என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அந்தவகையில், புத்தாண்டில் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024இல் குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் முதல் 4 மாதங்கள் பயணம் செய்வார். மே மாதத்தில் இருந்து பத்தாம் […]

மதுரை மாவட்டம் கே.புதூர் அல் அமீன் நகரை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவரது மகன் பஹியா ஜன்னா பப்ளிக் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் மழையின் காரணமாக ஷூ அணிந்து செல்வதற்கு பதிலாக பள்ளிக்கு செப்பல் அணிந்து சென்றிருக்கிறார் மாணவன் பஹியா. இதற்கு ஆசிரியர்களே எதுவும் சொல்லாத நிலையில் பள்ளியின் அலுவலக நிர்வாக பொறுப்பாளர் ஷகீத் என்பவர், ஏன் ”ஷூ” அணிந்து வரவில்லை எனக் கேட்டு […]