அதிமுகவில் பஞ்சாயத்து ஓவர்.. இபிஎஸ் உடன் மீண்டும் இணையும் செங்கோட்டையன்..?

EPS Sengottaiyan AIADMK 1

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிழவி வந்தது. இதனிடையே அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


அதனைத்தொடர்ந்து அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார்.

அதன் பிறகு தான் 10 நாள் கெடு விதிக்கவில்லை, என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறி செங்கோட்டையன் ட்விஸ்ட் கொடுத்தார். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற பாஜகவின் பேச்சைக் கேட்டு செங்கோட்டையன் குரல் கொடுத்த நிலையில், பாஜகவும் எடப்பாடியும் ஒன்று சேர்ந்து அவரை  நட்டாற்றில் விட்டுவிட்டார்கள் என செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் கூறினர்.

இந்த நிலையில் செங்கோட்டையன் மீண்டும் இபிஎஸ் உடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களாக எந்த அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் அமைதி காத்து வந்த செங்கோட்டையன் மீண்டும் இபிஎஸ் உடன் இணைந்து தேர்தல் மற்றும் கட்சி பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read more: அதிகாலையிலேயே அதிர்ச்சி!. பேருந்து தீப்பிடித்து பயங்கர விபத்து!. 20 பேர் உயிரிழப்பு!. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!

English Summary

Panchayat over in AIADMK.. Sengottaiyan to rejoin EPS..?

Next Post

பி.ஆர்.கவாய் ஓய்வு!. உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதி இவர்தான்!. நியமன செயல்முறையை தொடங்கியது மத்திய அரசு!.

Fri Oct 24 , 2025
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை (CJI) நியமிக்கும் செயல்முறையை மத்திய அரசு வியாழக்கிழமை (அக்டோபர் 23) தொடங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அடுத்த மாதம் நவம்பர் 23 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். நீதிபதி கவாய் தனது வாரிசை பெயரிடக் கோரிய கடிதம் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறையை அறிந்தவர்கள் பிடிஐ […]
justice suryakant 1

You May Like