பெற்றோர்களே உஷார்!. காலாவதியான Frooti, Appy Fizz பானங்கள் பறிமுதல்!. விடிய விடிய அதிரடி சோதனை!

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மும்பையில் உள்ள ‘பார்லே அக்ரோ’ (Parle Agro) நிறுவனத்தின் கிடங்கில் விடிய விடிய நடத்திய சோதனையில், ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள காலாவதியான Frooti மற்றும் Appy Fizz பானங்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


மும்பை செம்பூர் பகுதியில் உள்ள பிரயாக் நகரில் அமைந்த பார்லே அக்ரோ நிறுவனத்தின் கிடங்கில் கடந்த ஆகஸ்ட் 13 மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வுப் பணி, எட்டு எஃப்.டி.ஏ அதிகாரிகள் குழுவால் நேற்று (ஆகஸ்ட் 14) அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் போது ஃபிரூட்டி, அப்பாய் ஃபிஸ், கேண்டி ஜூஸ் மற்றும் பிற குளிர்பானங்களின் காலாவதியான இருப்பு அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த கிடங்கிற்கு அதிகாரிகள் உடனடியாக சீல் வைத்ததோடு, அப்பொருட்களை விநியோகிக்கப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை அங்கிருந்து எந்தப் பொருட்களையும் விற்கவோ அல்லது வெளியே கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

நகரத்தின் உணவகங்கள் மற்றும் கிடங்குகளில் உணவுப் பாதுகாப்புத் துறை நடத்தி வரும் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 12 அன்று சுகாதார விதிகளை மீறியதாக மும்பையின் வைல் பார்லே, போரிவலி, காட்கோபர் மற்றும் சதாரா ஆகிய இடங்களில் உள்ள பிரபல ‘டொமினோஸ் பீட்சா’ (Domino’s Pizza) நிறுவனத்தின் 4 கிளைகளின் உரிமங்களை எஃப்.டி.ஏ சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருந்தது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி துக்காராம் முண்டே தலைமையிலான இந்தச் சிறப்பு ஆய்வில், FSSAI உரிமத்தைக் காட்சிப்படுத்தாதது, முறையான குடிநீர் வசதி இல்லாமை, மோசமான உணவு சேமிப்பு முறைகள், பூச்சிக்கட்டுப்பாடு இல்லாமை மற்றும் சைவ-அசைவ உணவுகளைப் பிரித்து வைக்காதது போன்ற பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. உணவகச் சங்கிலிகள் மற்றும் கிடங்குகளில் உணவுப் பாதுகாப்பையும் சுகாதார தரத்தையும் பலப்படுத்துவதே இந்தத் தீவிர நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என எஃப்.டி.ஏ தெரிவித்துள்ளது.

1newsnationuser5

Next Post

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..! தங்கம் விலை அதிரடி சரிவு..! இன்றைய நிலவரம் என்ன?

Fri Aug 14 , 2026
சென்னையில் தங்கம் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இன்று சற்றே நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. நேற்றைய தினம் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் விலை ரூ.14,220க்கும் ஒரு சவரன் ரூ.1,13,760க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் தங்கத்தின் விலை மிக குறைந்ததுள்ளது. இன்றைய வர்த்தக நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் […]
gold rate

You May Like