அதிகாலையே சர்ப்ரைஸ்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.5000!யாருக்கெல்லாம் ஜாக்பாட்..

Pension 2025

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், பொதுமக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று அடல் ஓய்வூதிய யோஜனா (Atal Pension Yojana – APY). இந்தத் திட்டத்தின் கீழ், 60 வயதை எட்டிய பிறகு மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம். வழக்கமான வருமானத்தை உறுதி செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.


மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பயனாளிகளுக்கு, ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியத் தொகை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியான பயனாளர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. நீண்டநாளாக இந்த தொகையை எதிர்பார்த்திருந்த பொதுமக்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளர்கள் அவர்கள் முன்பே செலுத்திய மாதாந்திர பங்களிப்புத் தொகைக்கு ஏற்ப, குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் அதிகபட்சமாக ரூ. 5,000 வரை ஓய்வூதியம் பெறுகின்றனர். இந்த திட்டம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

யார் தகுதியுடையவர்கள்? இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்குள் உள்ள இந்தியக் குடிமக்கள் சேரலாம். ஆனால், வரி செலுத்துவோர் தகுதியற்றவர்கள். அதாவது, வருமான வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் திறக்க முடியாது. திட்டத்தில் சேர்வதற்கு சேமிப்பு வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை மற்றும் செயலில் உள்ள மொபைல் எண் அவசியம்.

சந்தாதாரர் 60 வயதுக்கு முன் இறந்தால், மனைவி அதே கணக்கில் பங்களிப்புகளைத் தொடர்ந்து செய்து, ஓய்வூதியம் பெறலாம். இல்லையெனில், முழுத் தொகையையும் ஒருமுறை திரும்பப் பெறலாம்.

Read more: கருவேப்பிலையின் பக்க விளைவுகள்.. இந்த பிரச்சனை உள்ளவர்கள் தொடவே கூடாது..! ஏன் தெரியுமா..?

English Summary

Pension amount for the month of April has been released to beneficiaries registered under the Central Government’s APY scheme.

Next Post

விமானங்களில் இனி இலவச சீட் இல்லை..! 60 சதவீத இருக்கை விதியை நிறுத்திவைத்த மத்திய அரசு..!

Fri Apr 3 , 2026
விமான நிறுவனங்கள் ஏப்ரல் 20 முதல், ஒரு விமானத்தில் உள்ள இருக்கைகளில் குறைந்தது 60 சதவீதத்தை எவ்விதக் கூடுதல் கட்டணமும் இன்றி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.. இந்த நிலையில் இந்த உத்தரவை, நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது. புதிய வழிகாட்டுதல்கள் குறித்து விமான நிறுவனங்கள் தங்கள் கவலைகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது உத்தரவில், இந்திய […]
flights

You May Like