Pension Hike | செம குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் ஓய்வூதியம் உயர்வு..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டின் சமூக நலத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்த அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சமூக நலத்துறை பிறப்பித்த அரசாணைக்கு எதிராக ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதிய தொகையை ரூபாய் 2,000 என நிர்ணயித்து 3 ஆண்டுகளுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியதாகவும், ஏப்ரல் 2003-க்கு முன் தங்களின் சேவையை முறைப்படுத்த முடியவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், அவர்களுக்கு ஓய்வூதிய விதிகள் மற்றும் பங்களிப்பு சட்டம் ஆகிய இரண்டின் கீழ் ஓய்வூதியம் பறிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஒவ்வொரு ஓய்வூதியத்தை திருத்தத்தின் போதும் பணவீக்கத்தின் அடிப்படையில் ஓய்வூதித்தை தொடர்ந்து உயர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More : Senthil Balaji | புதிய மனு..!! செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு பறந்த உத்தரவு..!!

Chella

Next Post

சுற்றாலப் பயணிகளிடம் ஆசை காட்டி பணத்தை ஆட்டைய போடும் டிப்டாப் வடமாநிலப் பெண்கள்! உஷார்...

Thu Mar 28 , 2024
திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ச‌ர்வ‌தேச‌ சுற்றுலாத‌ல‌மாகும், இங்கு நில‌வும் இத‌மான‌ கால‌நிலையை கொண்டாடி ம‌கிழ‌ த‌மிழ‌க‌ ம‌ட்டுமின்றி, கேர‌ளா, ஆந்திரா, க‌ர்நாட‌கா உள்ளிட்ட‌ ப‌ல்வேறு மாநில‌ சுற்றுலாப்பய‌ணிக‌ள் நாள் தோறும் வருவ‌து வாடிக்கையான‌ ஒன்று, இந்நிலையில் சுற்றுலா வ‌ரும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை குறி வைத்து அவ‌ர்க‌ளிட‌ம் க‌வ‌ர்ச்சிக‌ர‌மான‌ வார்த்தைக‌ளை கூறி விள‌ம்ப‌ர‌ங்க‌ளை காட்டி விள‌ம்ப‌ர‌த்தில் ப‌ரிசு விழுந்தால் வெளி நாட்டிற்கு அழைத்து செல்வ‌தாகவும் வ‌ருட‌த்திற்கு 7 நாட்க‌ள் 10 வ‌ருட‌த்திற்கு உல‌க‌த்தில் […]

You May Like