மக்களே ஜாக்கிரதை.. கோடை காலத்தில் கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது… மத்திய அரசு அறிவுரை..

நாட்டில் தற்போது குளிர்காலம் முடிந்து, கோடை காலம் தொடங்கி விட்டது… அதிகாலையில் பனிமூட்டம் இருந்தாலும், பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.. இந்நிலையில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை பிப்ரவரியில் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. மேலும் மார்ச் முதல் மே வரை இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்று எச்சரித்துள்ளது..

1 india heat 1

இந்நிலையில் மத்திய அரசு, வெப்ப அலை தொடர்பான அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அத்தியாவசிய மருந்துகள், நரம்பு வழி திரவங்கள், ஐஸ் பேக்குகள் மற்றும் ORS (வாய்வழி மருந்து) ஆகியவற்றுடன் மக்கள் தயாராக இருக்க வேண்டும்.. பொதுமக்கள் மக்கள் நாள் முழுவதும் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் வாய்வழி ரீஹைட்ரேஷன் தீர்வுகளை (ORS) உட்கொள்ள வேண்டும்.. அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் நீரேற்றத்தை நிலையாக வைத்திருக்க முடியும்.. வீட்டில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஜூஸ், லெஸ்ஸி மற்றும் ஆகியவற்றை மக்கள் அருந்தலாம்.. பழச்சாறுகளில் சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ள வேண்டும்..

மதுபானம், தேநீர், காபி மற்றும் கார்பனேட்டட் குளிர்பானங்கள் அல்லது அதிக அளவு சர்க்கரை கொண்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.. ஏனெனில் இவை உடலில் நீரிழப்பு ஏற்பட வழிவகுக்கும் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும். அதிக புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் பழைய உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும்…” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

பொதுவாக புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுக்கும்.. இதனால் உடல் வெப்ப அதிகரிப்பதுடன், நீரிழப்பு ஏற்படுகிறது.. எனவே உடல் சூட்டை குறைக்க, எலுமிச்சை சாறு, தேங்காய் தண்ணீர், மோர் போன்றவற்றை அருந்தலாம்.. டீ, காபிக்கு பதிலாக எலக்ட்ரோலைட்கள் நிறைந்த திரவங்களை எடுத்துக் கொள்ளலாம்.. மேலும் காரமான உணவுகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.. தவறாமல் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.. மக்கள் கோடைக்காலங்களீல் தளர்வான, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்று நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகினர்..

1newsnationuser1

Next Post

விவசாயிகள் கவனத்திற்கு...! உழவன் செயலியில் இனி நீங்களே புக் செய்து கொள்ளலாம்...! முழு விவரம் இதோ....

Thu Mar 2 , 2023
இடைத்தரகர் இன்றி அறுவடை இயந்திரங்கள் வாங்க ‘உழவன் செயலியை பயன்படுத்தலாம். விவசாயிகள் நெல் அறுவடையில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அறுவடை நேரத்தில் கூலி ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற நிலையை சரி செய்ய அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அறுவடை இயந்திரங்களுக்காக சில நேரங்களில், விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தள்ளப்படுவதால், தரகு கொடுத்து அறுவடை செலவு அதிகமாவதுடன் மொத்த வருமானமும் குறைகிறது. இந்த […]
tn goverment farments

You May Like