கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.. 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது.. 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில், அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார்.. பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்..
தற்போது திமுக காங்கிரஸ் கட்சியினரிடையே நட்பு பாராட்டி வரும் கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக கூறியிருந்தார்.. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்து, 6 ம் ஆண்டு தொடங்குகிறது.. இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ ஆரம்பித்த துடிப்புக் குறையாமல், ஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம் . ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். உள்ளத்தில் எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக்கொள்வோமாக. மநீம உறவுகள், நற்பணி இயக்க நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்..” என்று குறிப்பிட்டுள்ளார்..