‘ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றால் என் இதயமே நின்றுவிடும்’..!! தேர்தல் மன்னன் பத்மராஜன் பரபரப்பு பேட்டி..!!

அனைத்து தேர்தலிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில், எதிர்பாராதவிதமாக ஏதாவது ஒரு தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், எப்படி இருக்கும் என கேட்டதற்கு எனது இதயம் நின்று விடும் என சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தைச் சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதிக்கு முதல் வேட்பாளராக மனு தாக்கல் செய்த பத்மராஜன் செய்தியாளரிடம் கூறுகையில், 1988 முதல் 238 தேர்தல்களில் மனு தாக்கல் செய்துள்ளேன். டெபாசிட் உள்ளிட்டவற்றுக்காக பல லட்சம் இழந்திருக்கிறேன். ஆனாலும், எனக்கு ஓர் அடையாளம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரம்பத்தில் பணத்தை விரயமாக்குவதாக வீட்டிலிருப்பவர்கள் தெரிவித்த போதிலும், சாதனை புரிய வேண்டும் என்ற என் எண்ணத்தை உணர்ந்த பின்னர், தங்கள் மனதை மாற்றிக் கொண்டார்கள்.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டேன். இதுபோன்ற பல களேபரங்களை கடந்து வந்துள்ளேன். இவ்வாறு கூறிய பத்மராஜனிடம், “எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு தேர்தலில் வெற்றி பெற்று விட்டால்?” என்று கேட்டபோது, “அப்படி நடந்துவிட்டால் என் குடும்பத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிடும். ஏனெனில் நான் வெற்றிபெற்றால், ஆனந்த அதிர்ச்சியில் என் இதயம் துடிப்பதையே நிறுத்தி விடும்” என்றார் சிரித்தபடி.

Read More : ஜிம்முக்கு வரும் பெண்களிடம் உடலமைப்பை காட்டி பணம் பறித்த மிஸ்டர் வேர்ல்ட்..!! ஜாமீனில் வெளிவந்தும் அடங்காத சேட்டை..!!

Chella

Next Post

கிரெடிட் கார்டு பில்லை EMI ஆக மாற்றினால் இவ்வளவு நன்மைகளா?

Sat Mar 23 , 2024
உங்களின் கிரெடிட் கார்டு பில்லை EMI ஆக மாற்றுவது மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்… பல வாடிக்கையாளர்களுக்கு, மடிக்கணினிகள் அல்லது உபகரணங்கள் போன்ற உயர் டிக்கெட் பொருட்களை வாங்குவது பெரும்பாலும் கணிசமான நிதி திட்டமிடலை உள்ளடக்கியது. இருப்பினும், பல வங்கிகள் வழங்கும் சமமான மாதாந்திர தவணை (EMI) மாற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் குறிப்பிடத்தக்க பரிமாற்றத்தை செய்ய அனுமதிக்கிறது. […]

You May Like