தாய்லாந்தில் இருந்து கடந்த 4ம் தேதி டில்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 8 பணிப்பெண்கள் உட்பட, 145 பேர் பயணித்தனர். விமானம் நடு வானில் பறந்த போது, திடீரென பயங்கரமாக குலுங்கியது. அது பறந்து கொண்டிருந்த உயரத்தில் இருந்து திடீரென பல அடி தாழ்வாக பறந்ததால், பயணிகள் பீதி அடைந்தனர்.
பணிப் பெண்கள் சிலர், விமானத்திற்குள் இருந்த பயணிகள் மீது தடுமாறி விழுந்ததில், 17 பேர் காயம் அடைந்தனர். சில மணி நேர பயணத்திற்குப் பின், விமானம் டில்லி வந்தடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக, விமான விபத்து விசாரணை அமைப்பு தீவிர விசாரணை நடத்தியது.
அதில், விமானத்தை இயக்கிய முதன்மை பைலட் கஞ்சா போதையில் இருந்ததும், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அவர் மயக்கத்தில் சுருண்டு கிடந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விமானம் டில்லியில் தரையிறங்கிய போது, முதன்மை பைலட்டை, விமான நிலைய ஊழியர்கள் கைத் தாங்கலாக அழைத்து சென்றதை பார்த்ததாகவும், பயணிகள் சிலர் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்களை அடுத்து, இது குறித்து விமானத்தில் பணியில் இருந்த அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Read More : தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாட வேண்டும்..!! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!


