Gmail கணக்குகளுக்கு ஆப்பு..!! 1ஆம் தேதி முதல் செயல்படாது..!! கூகுள் நிறுவனம் அதிரடி..!! காரணம் இதுதான்..!!

வேலை செய்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை ஜி-மெயில் பயன்பாடு என்பது அத்தியாவசியமாக மாறிவிட்டது. ஜிமெயிலை தினந்தோறும் ஒரு முறையேனும் பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் பணிகளை செய்வது, வேலை பார்ப்பவர்கள் பிறருடனான தொடர்புக்காகவும் ஜிமெயின் கணக்கை பெரும்பாலோனர் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதை ஸ்டார்ட்அப் செய்வதற்கு ஜிமெயில் கணக்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்த செயலியானது அனைத்து ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டேப்லெட்களிலும் தவறாமல் நிறுவப்பட்டிருக்கும் செயலியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு மேல் ஜிமெயில் கணக்குகள் வேலை செய்யாது என்ற தகவல் வெளியாகி வந்தது. ஆனால், அந்த தகவலுக்கு கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் ஜிமெயில் ஐடி செயல்படாது என வெளியான தகவலை கூகுள் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பரவிய தகவலால், ஜிமெயிலில் உள்ள தங்களது தகவல்கள் அனைத்து அழிந்துவிடுவோ என பயனர்கள் அச்சமடைந்தனர். ஆனால், இது போலியான செய்தி என விளக்கமளித்துள்ள கூகுள் நிறுவனம், பயனர்களின் மின்னஞ்சல் கணக்கு வழக்கம்போல செயல்படும் என அறிவித்துள்ளது.

English Summary : Is Gmail shutting down? Google responds to viral internet hoax

Read More : Holiday | என்னது பிப்.26ஆம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா..? வெளியாகுமா அறிவிப்பு..?

Chella

Next Post

Rain: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...! நாளை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் தகவல்

Sat Feb 24 , 2024
Rain notification: நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் லேசான மழை பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில்அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும். நாளை தமிழகத்தில் ஓரிரு […]

You May Like