விவசாயிகளுக்கு பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் தலா ரூ.2000…! இன்று வங்கி கணக்கில் செலுத்தப்படும்…!

பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வீதம் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கவிருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக மொத்தம் ரூ. 16,800 கோடி டெபாசிட் செய்யப்படும்.

Farmers

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பிஎம் – கிசான் 13வது தவணை வெளியீட்டு நிகழ்வு, இந்திய ரயில்வே, ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து, கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெறும். இத்திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12வது தவணை கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்பட்டது. 13 வது தவணை வெளியிடப்படுவதன் மூலம், இந்தியாவின் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் தங்களின் வாழ்வாதார இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவுவதற்கும் அரசு தனது உறுதிப்பாட்டைத் தொடர்கிறது.

பிஎம் – கிசான் திட்டம் ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க பலன்களைத் தந்துள்ளது. இப்போதைய தவணை அவர்களின் வருவாயை மேலும் அதிகரிக்கச் செய்யும்; விவசாயத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்.

Vignesh

Next Post

ஓட்டுநர், நடத்துனர் காலிப்பணியிடங்கள்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Mon Feb 27 , 2023
தமிழ்நாடு அரசு கடந்த 14ஆம் தேதி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நிறுவனத்தில் காலியாக உள்ள 122 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தகுதிவாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியலை, ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக […]
bus job 1

You May Like