திருமணமான 6 மாதத்தில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு….! கலங்கி நிற்கும் குடும்பத்தினர்…..!

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு நிச்சயம் தற்கொலை என்பது ஒரு தீர்வாக இருக்காது. மாறாக அந்த பிரச்சினையை எப்படி தீர்த்து வைப்பது என்று நின்று நிதானமாக யோசித்து செயல்பட்டால் நிச்சயம் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். ஆனால் பலர் முன்பின் யோசிக்காமல் கெடுக்கும் சில முடிவுகளால் பல குடும்பங்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றன.


அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 2வது குறுக்கு தெருவில் அபிபா (23) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு விக்ரம் என்ற இளைஞருடன் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் திருமணம் நடந்தது. இத்தகைய நிலையில், கணவன், மனைவிக்கு இடையில் குடும்ப பிரச்சனை எழுந்து அதன் காரணமாக, தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி கொடுங்கையூரில் இருக்கும் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்ற அபிபா திடீரென்று அங்கே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Next Post

இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்னென்ன…….? வெளியான தகவல்…..!

Tue May 2 , 2023
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது 11 மணியளவில் தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டம் மதியம் 12 10 மணி வரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. திமுக ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து வரும் 7ம் தேதியோடு 2 வருடங்கள் நிறைவு பெறுகிறது. ஆகவே தற்சமயம் நடந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றதாக […]
TN govt 1

You May Like