சுவர் முழுக்க ரத்தம்.. ராக்கி கட்டி விட்ட தங்கையை சாவும் வரை பலாத்காரம் செய்த அண்ணன்..!! பகீர் சம்பவம்..

529420 rakshabandhan

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரக்ஷா பந்தன் அன்று ராக்கி கட்டிய 14 வயது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞன் சுர்ஜித். இவர் கடந்த சனிக்கிழமை தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தங்கை உறவு கொண்ட 14 வயது சிறுமி சுர்ஜித்துக்கு ராக்கி கட்டி விட்டார். பின்னர் இரவு நேரம் மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த சுர்ஜித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்று அவரது உடலை அறையில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியுள்ளார்.

சிறுமியின் தந்தை, அன்றிரவு வேறு அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால் எதையும் கவனிக்கவில்லை. மறுநாள் காலை மகளின் உடலை கண்டதும், உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் பல இடங்களில் இரத்தக் கறைகள் இருப்பதை கவனித்து, இது தற்கொலை அல்ல என்பதில் உறுதியடைந்தனர்.

சுர்ஜித் குடும்பத்தினருடன் எப்போதும் இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர். குடும்பத்தினரிடம் கேள்விகள் கேட்கப்படும் போது, அவர்களுக்குப் பதிலாகத் தானே பேசினார். இதனால் போலீசார் அவர்மீது சந்தேகமடைந்தனர். இதற்கிடையே அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. சுர்ஜித்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார் பின்னர் சிறுமையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.. நினைத்துக் கூட பார்க்க முடியாத கோர விபத்து..!! 2 பேர் படுகாயம்..

English Summary

Police said the man also tried to mislead the investigation after killing his 14-year-old cousin.

Next Post

மிகவும் வலிமிக்க, உயிருக்கு ஆபத்தான தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்..! முகப்பருவை அழுத்தியதால் நேர்ந்த விபரீதம்..!

Thu Aug 14 , 2025
முகத்தில் பருக்கள் தோன்றும் அதை கிள்ளுவது அல்லது அழுத்துவது என்பது பெரும்பாலான மக்களின் பொதுவான பழக்கமாக உள்ளது.. ஆனால் பருவை அழுத்தியதால், பெண் ஒருவர் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.. நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு பெண், முகத்தின் அதிக ஆபத்துள்ள பகுதியில் மூக்கின் கீழ் ஒரு பரு தோன்றியதை அடுத்து அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.. லிஷ் மேரி என்ற பெண் தனது மூக்கிற்கு கீழே […]
woman pimple

You May Like