Flash: 17 வயது சிறுவன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு.. நெல்லையில் பரபரப்பு..!!

gunshoot

நெல்லை பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறி 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நள்ளிரவு 11 மணியளவில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை சமாதானப்படுத்துவதற்காக ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இரண்டு காவலர்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, 17 வயது சிறுவன் ஒருவன் வீட்டிற்குள் இருந்த காவலர்களை நோக்கி அரிவாளுடன் வெட்ட முயன்றுள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்தவும், தங்களைப் பாதுகாப்பதற்காகவும் சிறுவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச்சூட்டில் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு, உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: சுப்பிரமணியபுரம் பட பாணியில் நடந்த ஆணவ கொலை..!! வீட்டிற்கு அழைத்த காதலி.. கண்ணில் மிளகாய் பொடி தூவி.. பகீர் தகவல்

English Summary

Police shooting at 17-year-old boy.. stir in Nellai..!!

Next Post

இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற சலுகை... யாரெல்லாம் இதில் பயன்பெறலாம்...?

Tue Jul 29 , 2025
தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்காக 11 இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் (இஎஸ்ஐசி), சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் இஎஸ்ஐ சட்டம், 1948-ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மாதத்திற்கு ரூ.21000/- வரை (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000/-) ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் […]
esi 2025

You May Like