#Breaking: அரசு ஊழியர்களுக்கு ரூ.3,000 பொங்கல் போனஸ் அறிவிப்பு…!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசின்‌ நலத்‌ திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும்‌ அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும்‌ பொங்கல்‌ பண்டிகையை முன்னிட்டு,மிகை ஊதியம்‌ மற்றும்‌ பொங்கல்‌ பரிசு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌.


இதன்படி, சி மற்றும்‌ ‘டி’ பிரிவைச்‌ சார்ந்த பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு ரூபாய்‌ 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம்‌ வழங்கப்படும்‌. தொகுப்பூதியம்‌, சிறப்புக்‌ கால முறை ஊதியம்‌ பெறும்‌ பணியாளர்கள்‌, மற்றும்‌ நிதியாண்டில்‌ குறைந்தபட்சம்‌ 240நாட்கள்‌ அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை ‘செலவினத்தின்‌ கீழ்‌ மாத அடிப்படையில்‌ நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்‌ பெறும்‌ முழுநேர மற்றும்‌ பகுதி நேரப்‌ பணியாளர்கள்‌ ஆகியோருக்கு ரூபாய்‌ 1,000 சிறப்பு மிகை ஊதியம்‌ வழங்கப்படும்‌.

“சி” மற்றும்‌ “டி” பிரிவைச்‌ சார்ந்த ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌, முன்னாள்‌ கிராம பணியமைப்பு (முன்னாள்‌ கிராம அலுவலர்கள்‌, கிராம உதவியாளர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள்‌ ஆகியோருக்கும்‌ ரூபாய்‌ 500 பொங்கல்‌ பரிசாக வழங்கப்படும்‌.

Vignesh

Next Post

முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை!! என்ன காரணம் தெரியுமா?

Mon Dec 26 , 2022
ஆவடியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-சௌபாக்கியா இவர்களின் மூத்த மகள் சிறுமி டானிய (9), ஆறரை வருடங்களாக அரிய வகை முக சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார். தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, முக சீரமைப்பு அறுவை சிகிச்சை ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. சிறுமி டானியாவை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். […]
danya

You May Like