தமிழ்நாடு தாபல் துறையில் வேலை தேடுபவர்களுக்கு தற்பொழுது முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு தபால் வட்டாரத்தில் உள்ள போஸ்டல் உதவியாளர், சாட்டிங் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதியாக 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டாரத்தில் கீழ் இயங்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் உள்ள தபால் மற்றும் தபால் பிரிவுக்கும் பிரிவுகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்திய தாபல் துறை கிளை போஸ்ட் மாஸ்டர் (GDS) பணியில் உள்ளவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஜூலை 20-ம் தேதி 3 தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 3 தாள்கள் கொண்டு தேர்வு நடத்தப்படும். முதல் இரண்டு தாள்கள் எழுத்துத் தேர்வாகவும். மூன்றாம் தாள் கணினியில் டேட்டா எண்டரி திறன் தேர்வாகௌம் நடைபெறும். இதில் மூன்றிலும் தேர்வாகும் நபர்களின் மதிப்பெண்கள் கொண்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும். மூன்றிலும் 40% மதிப்பெண் எடுக்க வேண்டும். தேர்விற்கான அட்மிட் கார்டு ஜூலை 14-ம் தேதி வெளியாகும். மேலும் தகவல்களுக்கு, 044-27660233 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.