சென்னையில் அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம்…! இந்த ஆவணங்கள் இருக்க வேண்டும்…!

Post Office Special Scheme.jpg

கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் 30.06.2025 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.

கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் 30.06.2025 அன்று நடைபெற உள்ளது. குறைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 26.06.2025 ஆகும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை ( மணியார்டர்), விரைவு தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். .


புகார் சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

குறைகளை அனுப்புவதற்கான முகவரி: முதன்மை அஞ்சல் அதிகாரி, அண்ணா சாலை தலைமை தபால் நிலையம், சென்னை 600 002. தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் “அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம்” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more; இந்திரா காந்தியின் இளைய மகன் முதல் விஜய் ரூபானி வரை!. விமான விபத்துகளில் உயிரிழந்த 7 பிரபல இந்திய பிரபலங்கள்!

Vignesh

Next Post

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு!

Sat Jun 21 , 2025
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்து தோனியின் இரண்டு சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 20ம் தேதி தொடங்கிய டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 5 நாட்கள் […]
Rishabh Pant breaks Dhoni record 11zon

You May Like