ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு”-தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு. தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ஒத்திவைப்பு.
நாடு முழுவதும் எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளாமோ படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி கடந்த மே 7-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடுமுழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் என 17 இடங்கள் உட்பட நாடுமுழுவதும் 179 நகரங்களில் ஜூன் 15-ம் தேதி இரு கட்டங்களாக நீட் தேர்வு நடைபெறும். இருதரப்பினருக்கும் மாறுபட்ட வினாத்தாள்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்க முடிவுசெய்து தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு. தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டது.
Read More: முக்கிய அறிவிப்பு…! அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜுன் 14-ம் தேதி வரை கலந்தாய்வு…!