#Breaking : டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்..

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உணரப்பட்டது..

நேபாளத்தில் இன்று பிற்பகல் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியாவில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் இந்தியாவின் பிற இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. மதியம் 2.28 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 5.8 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் காட்டுகிறது.


எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை.. இதன் எதிரொலியாக இந்தியாவின் டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் வேறு சில பகுதிகளில் வலுவான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்..

மிக உயரமான மலைகளை கொண்ட நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படுவது பொதுவான ஒன்றாகும்.. கடந்த 2015-ம் ஆண்டு, அங்கு ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர்.. சுமார் 1 மில்லியன் கட்டிடங்கள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! வீடுகளில் இருந்து அலறியடித்து ஓடும் மக்கள்..!!

Tue Jan 24 , 2023
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நிமிடங்கள் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால், அச்சமடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி […]
டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! வீடுகளில் இருந்து அலறியடித்து ஓடும் மக்கள்..!!

You May Like