நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உணரப்பட்டது..
நேபாளத்தில் இன்று பிற்பகல் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியாவில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் இந்தியாவின் பிற இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. மதியம் 2.28 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 5.8 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் காட்டுகிறது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை.. இதன் எதிரொலியாக இந்தியாவின் டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் வேறு சில பகுதிகளில் வலுவான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்..
மிக உயரமான மலைகளை கொண்ட நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படுவது பொதுவான ஒன்றாகும்.. கடந்த 2015-ம் ஆண்டு, அங்கு ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர்.. சுமார் 1 மில்லியன் கட்டிடங்கள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.