பிரதமரின் கிஷான் திட்டம்!… விவசாயிகளுக்கு ரூ.2000!… 14வது தவணை எப்போது கிடைக்கும்?

பிரதமரின் கிஷான் சம்மான் திட்டத்தின் 14வது தவணைத் தொகையான ரூ.2000 விவசாயிகளுக்கு மே மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளன.


கிசான் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் கிடைக்கும். அதாவது ஆண்டுதோறும் ரூ.6000 கொடுக்கப்படுகிறது. இதன்படி இத்திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் மாதங்களில் 3 தவணைகளாக நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

கிசான் திட்டத்தில் 14வது தவணைக்கு விண்ணப்பிக்கும் முறை: முதலில் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து , ‘Farmer’s corner என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு, ‘New Farmer Registration’ (புதிய விவசாயிகள் பதிவு) என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். ஆதார் விவரங்களை உள்ளிட்ட பின்னர் ‘Yes’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, கிசான் திட்ட விண்ணப்பப் படிவம் 2023 இல் கேட்கப்பட்ட தகவலைக் கொடுக்க வேண்டும்.

கிசான் திட்டத்தில் பயனாளர் நிலையை எப்படி சரிபார்ப்பது?. முதலில் www.pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லாக் இன் செய்யவும். பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Former’s Corner’ ஐ கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, ‘Beneficiary Status’ என்பதை கிளிக் செய்க. அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, ‘Get Data’ என்பதை க்ளிக் செய்தால் பயனாளர் நிலை திரைக்கு வரும்.

கிசான் திட்டத்தில் பயனாளிகளின் பட்டியலை எவ்வாறு சரிபார்ப்பது? முதலில் www.pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லாக் இன் செய்யவும். பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Beneficiary list’ ஐ கிளிக் செய்ய வேண்டும். இங்கே, மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு ‘Get report’ என்பதை கிளிக் செய்யதால், பயனாளிகளின் பட்டியல் திரையில் காட்டப்படும்.

KOKILA

Next Post

ஆபாச படம் பார்த்துக்கொண்டே!... பெண்கள் முன்பு இளைஞர் செய்த அந்த காரியம்!... வைரலாகும் வீடியோ!

Sun Apr 30 , 2023
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ஆபாச படம் பார்த்துக்கொண்டே பெண்களுக்கு மத்தியில் சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பாக காணப்படும் டெல்லி மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். வழக்கம் போல நேற்றும் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என ஏராளமானோர் மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர்.அப்போது மெட்ரோ ரயிலில் பெண்ணின் அருகே அமர்ந்திருந்த வாலிபர் திடீரென […]
delhi metro train

You May Like