திடீர் ட்விஸ்ட்.. ஓபிஎஸ் தரப்புக்கு கடிதம் அனுப்பிய இபிஎஸ் தரப்பு.. அதிமுகவில் பரபரப்பு..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.. அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. இதே போல் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது..

இதனிடையே , அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரம் கோரியும், இரட்டை இலை சின்னம் கோரியும் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோதல் வேட்பாளரை பொதுக் குழு மூலம் தோவு செய்ய வேண்டும். பொதுக் குழுவை உடனே கூட்ட முடியாவிட்டால், உறுப்பினா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அதன்மூலம் ஒப்புதல் பெற வேண்டும். அந்த முடிவை அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் மூலம் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் இருவருமே ஏற்றுக்கொண்டனா். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோதலில் அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு என்றும், அவருக்கு ஆதரவு தெரிவித்து பொதுக் குழு உறுப்பினா்கள் இன்று (பிப். 5) இரவுக்குள் கடிதம் அளிக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற பதிலை அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் “எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்மொழிந்துள்ள அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற பதிலை இன்று மாலை 7 மணிக்குள் அளிக்க வேண்டும்.. தென்னரசுவை ஆதரிக்க சம்மதம் எனில் ஒப்புதல் அளிக்கிறேன் எனவும், இல்லையெனில், மாற்று வேட்பாளர் பெயரை வாக்குச் சீட்டில் குறிப்பிட வேண்டும்..” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான கடிதம், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே ஓபிஎஸ் தரப்பு அதிமுக அதிகாரபூா்வ வேட்பாளராக தென்னரசுவை ஓபிஎஸ் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. அதற்கான விடை இன்று மாலை 7 மணிக்குள் தெரிந்துவிடும்..

Maha

Next Post

வாகன உரிமையாளரின் பெயரை மாற்ற வேண்டுமா..? இனி ஈஸி தான்..!! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!

Sun Feb 5 , 2023
பழைய வாகனங்களை வாங்கும்போது, வாகன உரிமையை நம் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். இதற்கென ஆர்டிஓ இடைத்தரகர்களை நாடவேண்டிய சூழல் இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைன் மூலம் வாகன உரிமையாளர் பெயரை (ஆர்.சி.புக்) ஈஸியாக மாற்றிக்கொள்ளலாம். இதுகுறித்த வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். அதன்படி, முதலில் Parivahan எனும் இணையதளத்திற்கு சென்று நம் அக்கவுண்ட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு Online Services எனும் விருப்பத்தை கிளிக் செய்து, Vehicle […]

You May Like