ஆபரேஷன் சிந்தூர் பெயரை வைத்து வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டுள்ளது என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர் கட்சிகள் முன் வைத்தனர்.
மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிப்பதற்காக பல்வேறு சர்வதேச நாடுகளுக்கு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் சென்றுள்ளது. அக்குழுக்கள் நாடு திரும்பியதும், மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக, ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குர்பிரீத் சிங் கோகி கடந்த ஜனவரியில், தற்செயலாக துப்பாக்கியால் சுட்டதில் பலியானார். இதனால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 19-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து லூதியானாவில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்; ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக வாக்குகளை கோருகிறது. அவர்கள் ‘சிந்தூர்’ என்பதை நகைச்சுவையாக மாற்றியுள்ளனர்.
பாஜகவினர் ஒவ்வொரு வீட்டுக்கும் சிந்தூர் (குங்குமம்) அனுப்புகிறார்கள். இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் ‘சிந்தூர்’ பயன்படுத்துவீர்களா…? இது ‘ஒரே நாடு, ஒரே கணவர்’ திட்டமா..? என கேள்வி எழுப்பினார். அவர் பயன்படுத்திய “ஒரே நாடு, ஒரே கணவர்” என்ற வார்த்தை அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read More: அண்ணா பல்கலைக்கழகமாணவி பாலியல் வழக்கு… எந்த அரசியல் தலையீடும் இல்லை…! டிஜிபி விளக்கம்…!