பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை உயர்த்த உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை உயர்த்தி உள்ளது. இதற்கான அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. உயர்நிலை டெபிட் கார்டுக்கான அதிகபட்ச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை விரைவில் மாற்றுவதாக வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இது குறித்து வங்கி இணையதளத்தில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, வாடிக்கையாளர் மாஸ்டர்கார்டு, ரூபே மற்றும் விசா கோல்டு டெபிட் கார்டுகளின் அனைத்து பிளாட்டினம் வகைகளுக்கும் தினசரி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிஓஎஸ் வரம்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயரும்.
மேலும் விசா சிக்னேச்சர் டெபிட் கார்டுகள் மற்றும் ரூபே செலக்ட் கார்டுகளுக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ. 50,000 முதல் ரூ. 1,50,000, ஆக இருக்கும். பிஓஎஸ் பரிவர்த்தனைகளுக்கான தினசரி ரொக்கம் திரும்பப் பெறும் வரம்பு மேலும் அதிகரிக்கும், இது ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.