அப்டேட்ஸ்…! ATM-களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பு அதிகரிப்பு…! வங்கி முக்கிய அறிவிப்பு…! முழு விவரம்.‌‌..

பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை உயர்த்த உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை உயர்த்தி உள்ளது. இதற்கான அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. உயர்நிலை டெபிட் கார்டுக்கான அதிகபட்ச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை விரைவில் மாற்றுவதாக வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.


இது குறித்து வங்கி இணையதளத்தில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, வாடிக்கையாளர் மாஸ்டர்கார்டு, ரூபே மற்றும் விசா கோல்டு டெபிட் கார்டுகளின் அனைத்து பிளாட்டினம் வகைகளுக்கும் தினசரி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிஓஎஸ் வரம்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயரும்.

மேலும் விசா சிக்னேச்சர் டெபிட் கார்டுகள் மற்றும் ரூபே செலக்ட் கார்டுகளுக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ. 50,000 முதல் ரூ. 1,50,000, ஆக இருக்கும். பிஓஎஸ் பரிவர்த்தனைகளுக்கான தினசரி ரொக்கம் திரும்பப் பெறும் வரம்பு மேலும் அதிகரிக்கும், இது ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தொண்டையில் சளி கட்டிக்கொண்டு சிரமப்படுகிறீர்களா?கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து..!!

Tue Nov 22 , 2022
சுவாசத்தொகுதி தொடர்பான நோய்கள் பல அசவுகரியங்களை ஏற்படுத்துகின்றன. முக்கியமாக நுரையீரலில் தங்கி நிற்கும் சளி மற்றும் இருமல் போன்றவை எமது அன்றாட வாழ்வில் பல இன்னல்களை ஏற்படுத்தும். இவற்றுக்கு சரியான நிவாரணம் கிடைக்காவிடின், அதுவே வைத்திய உதவியை நாடவேண்டிய சுகாதாரப் பிரச்சினையாக மாறிவிடும்.நெஞ்சு சளி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, இருமல், கரையாத நுரையீரல் சளி மற்றும் நுரையீரல் தொடர்பான பல நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் ஓர் எளிய நாட்டு மருந்து பற்றி […]

You May Like