Rain Alert: இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை மழை… மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…!

rain 1

தமிழகத்தில் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், வரும் 3 முதல் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 2 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, மணிமுத்தாறு, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை ஆகிய இடங்களில் 1 செமீ.. மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More: முதல் நாளே புத்தகம்… கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று முதல் திறப்பு…!

Vignesh

Next Post

தண்ணீர் பட்டு பாத்ரூம் கதவுகள் சேதமடைகிறதா?. இதை மட்டும் ஒருமுறை ட்ரை பண்ணுங்க போதும்!

Mon Jun 2 , 2025
பொதுவாக நாம் வாழும் இடத்தை அல்லது வீட்டை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே நமது உடல் நலத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அதனால் நாம் வாழும் இடத்தை எப்பொழுதும் சுத்தமாக பராமரிப்பது நமது முக்கியமான கடமையாகும். அதிலும் குறிப்பாக நாம் பயன்படுத்தும் குளியலறை மற்றும் கழிவறையை மிக மிக கவனத்துடன் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் அவற்றை சுத்தமாக பாராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகவே […]
bathroom door dirty

You May Like