Rain | தமிழக மக்களுக்கு செம குட் நியூஸ்..!! மழை பெய்யுமாமே..!! எங்கெங்கு தெரியுமா..?

தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் இன்று முதல் 16ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, அதாவது 12ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 13ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், வரும் 14 முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 17ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Read More : ”ராணுவ வீரர்களுக்கு பதில் வேறொருவர் வாக்களிக்கலாம்”..!! வெளியான அறிவிப்பு..!!

Chella

Next Post

12 பில்லியன் டாலர் மோசடி வழக்கு..! பெண் ரியல் எஸ்டேட் அதிபருக்கு மரண தண்டனை..!

Thu Apr 11 , 2024
நாட்டின் மிகப்பெரிய நிதி மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரும் கோடீஸ்வரருமான ட்ரூங் மை லானுக்கு வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பரான டிராங் மை லான், தனிப்பட்ட நோக்கங்களுக்காக 12.5 பில்லியன் டாலர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருடைய குடும்பம் வியட்நாம் நாட்டின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். 2022 மதிப்பீடுகளின்படி, டிராங்கின் […]

You May Like