Rain | கொளுத்தும் வெயிலுக்கு நடுவே குளு குளு நியூஸை சொன்ன வானிலை மையம்..!! மகிழ்ச்சியில் மக்கள்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமாக இருக்கும் நிலையில், அடுத்த மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்தாண்டு தொடங்கிய பருவமழை, இந்தாண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வெயில் தீவிரமடைந்துள்ளது.

பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போது வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், அடுத்த மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது, “தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே, இன்று முதல் வரும் 1ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதே ஏப்ரல் 2 மற்றும் 4ஆம் தேதிகளில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 4 செ.மீ, காயல்பட்டினத்தில் (தூத்துக்குடி) 3 செ.மீ, கன்னியாகுமரி, கருப்பாநதி அணை (தென்காசி) தலா 1 செ.மீ மழையும் பெய்திருக்கிறது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : ’என்கிட்ட பவுடர் தான் இருக்கு பூசிக்கிறீங்களா’..? சோதனை செய்த அதிகாரிகளிடம் கிண்டல் செய்த மன்சூர் அலிகான்..!!

Chella

Next Post

ஆடு ஜீவிதம் படத்தில் சர்ச்சை காட்சிகளுக்கு கத்திரி போட்டுள்ள தணிக்கை குழு... அதிர்ச்சியில் படக் குழுவினர்!

Fri Mar 29 , 2024
பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் படத்தின் முழு வெர்ஷன் 3.30 மணி நேரம் படம் என்றும் அதில் இடம்பெற்ற சர்ச்சைக்குறிய காட்சிகளுக்கு தணிக்கை குழு கத்தரி போட்டுள்ளதாக இயக்குநர் பிளஸ்ஸி சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. சவுதி அரேபியாவில் 3 ஆண்டுகள் அடிமையாக இருந்து ஆப்பிரிக்கர் ஒருத்தர் உதவியுடன் தப்பித்து அந்த பாலை வனத்தில் இருந்து நகரத்துக்கு வரும் நஜீப் அதன் பின்னர் […]

You May Like