தமிழகத்தில் இருக்கின்ற அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம் பி பி எஸ், பி டி எஸ் போன்ற இடங்களுக்கு இணையதளங்களின் மூலமாக விண்ணப்பம் செய்வது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஆரம்பமாகி ஜூலை மாதம் 12ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக இதற்கு விண்ணப்பம் செய்தனர்.
அரசு ஒதுக்கிட்டு இடங்களுக்கு 26,805 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,394 பேரும் என ஒட்டுமொத்தமாக 40,1199 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்த விண்ணப்பங்கள் பரிசுகளை செய்யும் பணி நிறைவடைந்து இருக்கின்ற நிலையில் தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசை பட்டியல் சென்னை கிண்டியில் இருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று வெளியிடப்பட்டது.
அரசு ஒதுக்கீடு நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியல் தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி 569 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார். அதேபோல சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவியான அர்ச்சனா 537 மதிப்பெண்கள் உடன் 6ம் இடத்தை பிடித்துள்ளார்.