சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.06.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம் 2008-ல் அமைக்கப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் திருநங்கைகள் குறித்து போதிய விளம்பரம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் சிறப்பு முகாம் நடத்தி திருநங்கைகளின் தற்போதுள்ள எண்ணிக்கை விவரத்தினை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக, திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை, சுயதொழில் மானியம், திறன் பயிற்சி, மகளிர் சுய உதவிக் குழு பயிற்சி உள்ளிட்ட நேரிடையாக பெற்றிடும் வகையில் 27.06.2025 வெள்ளிக்கிழமை அன்று திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகம் அறை எண்.12 இல் நடைபெறவுள்ளது. இம்முகாமில் சேலம் மாவட்டத்தில் உள்ள திருநங்கையர்கள் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: சர்வதேச யோகா தினம் இன்று!. என்னென்ன நன்மைகள்?. தெரிந்துகொள்ள வேண்டியவை இதோ!