Red Alert | 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

rain

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 8 மாவட்டங்களுக்கு அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.


கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பல பகுதிகளில் மழையின் அளவு 100 மில்லி மீட்டரை கடந்து பதிவாகியுள்ளது.

இந்நிலையில், மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்பதைக் கணித்து பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.

மேலும் ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read More : “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்”..!! உதயநிதி கைதுக்கு எதிராக கொந்தளித்த ஸ்டாலின்..!!

Next Post

பிளானை மாற்றிய போலீஸ்.. டென்ஷனான உதயநிதி..!! விடிய விடிய விசாரணையா? செங்கிப்பட்டியில் பதற்றம்..!!

Tue Aug 4 , 2026
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இல்லத்தில் வைத்துக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தவெக மகளிரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், காலை 11 மணியளவில் உதயநிதியை அவரது இல்லத்திலேயே வைத்துப் பிடித்த காவல்துறையினர், உடனடியாக தஞ்சைக்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டனர். […]
Udhanidhi 2026

You May Like