உறைய வைக்கப்பட்ட இந்திய கடல் உணவுகளுக்கான தடை நீக்கம்.. கத்தார் அறிவிப்பு..

உறையவைக்கப்பட்ட கடல் உணவுகளை (frozen seafood) இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடையை கத்தார் நீக்கியுள்ளது.. இது வளைகுடா நாட்டிற்கான மேம்பட்ட ஏற்றுமதிக்கு வழி வகுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில், ஃபிஃபா உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்தியாவில் இருந்து சில உணவுகளில் இருந்து விப்ரியோ காலரா என்ற பாக்டீரியா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.


கால்பந்தாட்ட நிகழ்வுக்கு முன்னதாக, தங்கள் நாட்டில் போதிய சோதனைக் கூடங்கள் இல்லாததால், இந்தத் தடை தற்காலிகமானது என்று கத்தார் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மத்திய வர்த்தகத் துறையும், கத்தாரில் உள்ள இந்திய தூதரகமும் இணைந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்..

கத்தாரின் பொது சுகாதார அமைச்சகத்துடன் பல சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டன..இந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி இந்தியாவின் கடல் உணவு இறக்குமதிக்கான தடையை நீக்குவதாக கத்தார் அறிவித்துள்ளது.. முன்னதாக கடந்த 14-ம் தேதி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான தடையை சீனா நீக்கியது.. இந்தியாவின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொன பிறகு, 99 இந்திய கடல் உணவு பதப்படுத்தும் உணவுகளுக்கான இடைநீக்கத்தை சீன அரசு நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது..

RUPA

Next Post

ரயில்வே கேட் கீப்பரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மர்ம நபர்….! தென்காசியில் பரபரப்பு…..!

Sat Feb 18 , 2023
பாலியல் ரீதியான அத்துமிரல்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கிறது.அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு தமிழக அரசு அறிவுறுத்தினாலும் அதன் பேரில் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கை இது போன்ற சமூக விரோத செயலை ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் நேற்று […]

You May Like