திருச்சி மாநகர காவல் ஆணையாளர் கார்த்திகேய,ன் வழிப்பறியில் ஈடுபடும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்பாடுகளில் தங்களை ஏற்ப்படுத்திக் கொள்ளும் குற்றவாளிகள் மற்றும் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள திருச்சி மாநகர காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு ஒரு புதிய அறிவுரையை வழங்கி உள்ளார்.
அதனடிப்படையில் வயலூர் ரோடு அருகே வீடு வாடகைக்கு எடுத்து இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஒருவர் வழங்கிய புகாரினடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ரஷ்ராஜா என்ற கார்த்திக் ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்திருக்கிறார்கள்.
அதோடு இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கார்த்திக்ராஜா மீது மிரட்டி பணம் பறித்துச் சென்ற 5 வழக்குகளும், 2 சக்கர வாகனம் மற்றும் பூட்டி இருந்த வீட்டில் திருடியதாக 5 வழக்குகளும், கொலை முயற்சி மற்றும் தகராறில் ஈடுபட்டதாக 2 வழக்குகளும், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக 2 வழக்குகளும் என்று ஒட்டுமொத்தமாக 19 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது என்பது இந்த விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
அத்துடன் கார்த்திக்ராஜாவின் இது போன்ற தொடர் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் வழங்கிய அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு, திருச்சி மாநகர காவல் ஆணையாளர் கார்த்திக்ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் ராஜா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அத்துடன் திருச்சி மாநகரில் இப்படி பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் விதமாக குற்றங்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.