சிரியா குண்டு வெடிப்பு : 7 குழந்தைகள் பலி!

தெற்கு சிரியாவின் டரா மாகாணத்தில் பயங்கரவாதிகளால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் 7 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

தென்மேற்கு சிரியாவின் டரா மாகாணம் அருகே வீதியில் குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கே வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

இந்த வெடிகுண்டு விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜோர்டானுக்கும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளுக்கும் இடையே உள்ள மோதலால் பாதிக்கப்பட்டுள்ளது டரா மாகாணம். இதன் வடக்கு கிராமப்புறங்களில் வெடிகுண்டு வைத்தது யார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

Next Post

"வாரிசு அரசியலில் கூட பெண்களை புறக்கணிப்பதுதான் திராவிட மாடல்" ; வானதி சீனிவாசன்!

Sun Apr 7 , 2024
வாரிசு அரசியலிலும் பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் தேதி நெருங்க, நெருங்க திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இந்தியாவில் அரசியல் அதிகாரம்தான் உண்மையான அதிகாரம். அரசியல் அதிகாரம் இருந்தால்தான், ஒருவர் மற்றவர்களுக்கு கொடுக்கும் இடத்திற்கு வர […]

You May Like