நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த நபரை கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளை கும்பலுக்கு…..! காலையில் காத்திருந்த அதிர்ச்சி…..!

சென்னை அயனாவரம் பங்காரு தெருவை சேர்ந்தவர் மாரீஸ்வரன்(30) இவர் நேற்று முன்தினம் அதிகாலை 1 மணி அளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த ஐந்து பேர் மாரீஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்து மாரீஸ்வரனை கத்தியை காட்டி மிரட்டி இருக்கின்றனர். அதன் பிறகு அவரையும், அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கி விட்டு அவர்களிடம் இருந்த பணம் மற்றும் 7 செல்போன்களை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.


இது தொடர்பான புகாரின் பேரில் திருமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் பணப்பறிப்பில் ஈடுபட்டது பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த விஜய பிரபு (26) என்பவர் தான் என தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த அவரை கடந்த 26ம் தேதி காவல்துறையினர் கைதுசெய்தனர். அவரிடமிருந்து 4 செல்ஃபோன்கள், ஒரு ஆட்டோ மற்றும் ஒரு கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டனர்.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட விஜய் பிரபு ஆட்டோ ஓட்டுவதும், அவர் தன்னுடைய நண்பர்களான கல்லறை ஜான், விஜய் பாபு மற்றும் மேலும் இருவருடன் சேர்ந்து வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தலைமுறைவாக இருக்கின்ற கல்லறை ஜான் உட்பட 4️ பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

ஒருநாள் உலகக் கோப்பை யாருக்கு சாதகமாக அமையும்.??

Wed Jun 28 , 2023
சென்னை மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகள் நடைபெறுகின்றன. இதே மைதானத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக கடும் வெயிலில் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் சதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மனதிலும் உள்ளது. இந்திய அணிக்கான முதல் டெஸ்ட் வெற்றி, […]
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா இந்திய அணி..? இன்று கடைசி போட்டி..!

You May Like