ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பிரெட்ரிச் வின்சண்ட் (23) இவர் இந்தியாவுக்கு சுற்றுலா பயணமாக இலங்கை மூலமாக நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து காரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று தன்னுடைய பாஸ்போர்ட்டை காட்டி இந்திய சிம் கார்டு பெற்றுக் கொண்டார். அதன் பிறகு இரவு சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் இருக்கின்ற தங்கும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மேட்டுக்குப்பம் சாலை ஜெயராம் நகர் வழியாக சென்று கொண்டிருந்தபோது தலைக்கவசம் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2️ பேக்குகளை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர், இந்த பேக்குகளில் மடிக்கணினி மற்றும் அவருடைய உடமைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளனர். அதோடு, செல்போன், பாஸ்போர்ட், பர்ஸ் உள்ளிட்டவை அந்த பேக்கில் வைக்கப்படாமல் அவர் கையில் வைத்திருந்ததால் வழிப்பறி செய்தவர்களிடமிருந்து நல்வாய்ப்பாக தப்பியது.
இதனைத் தொடர்ந்து, அவர் வலசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த வளசரவாக்கம் காவல்துறையினர் வெளிநாட்டு பயணியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த மர்ம நபர்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். பயணிக்கு தங்குவதற்குரிய ஏற்பாடுகளை வளசரவாக்கம் காவல் துறையினர் செய்து கொடுத்தனர்.