அடுத்தடுத்து அதிரடி காட்டிய ரோகித், சுப்மன் கில்..!! ரசிகர்கள் செம குஷி..!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அடுத்தடுத்து சதம் அடித்து ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் மாஸ் காட்டியுள்ளனர். 


இந்தியா-நியூசிலாந்துக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களத்தில் இறங்கினர். முதல் பந்தில் இருந்தே இருவரும் அதிரடியாக விளையாட தொடங்கினர். நியூசிலாந்தின் பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்க விட்டு தெறிக்க விட்டனர்.

இதனால், அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்து கொண்டே சென்றது. இப்போட்டியில், 20 ஓவர்களில் இந்தியா 165 ரன்களை எடுத்தது. கேப்டன் ரோகித் ஷர்மா முதலாவதாக சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து, சுப்மன் கில்லும் சதம் அடித்து கெத்து காட்டினார். ரோகித் சர்மாவுக்கு இது 30-வது சதமாகும். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 3 ஆண்டுகளுக்கு பின் ரோகித் சதம் அடித்துள்ளதால் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

CHELLA

Next Post

“ இந்த சம்பவங்களை பற்றி ஏன் சொல்லவில்லை..” ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த டிஜிசிஏ..

Tue Jan 24 , 2023
பயணிகள் தவறான நடத்தை தொடர்பாக புகார் தெரிவிக்காததற்காக, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாரிஸில் இருந்து புது டெல்லிக்கு வந்த ஏர் இந்தியாவின் AI-142 விமானத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒரு சம்பவத்தில் ஒரு பயணி, விமான பணியாளர்களின் அறிவுரைகளை கேட்காமல் குடிபோதையில் கழிவறையில் […]
air india 1674554104855 1674554105076 1674554105076

You May Like