மேல்முறையீடு செய்த பெண்களுக்கு இம்மாதம் முதல் ரூ.1,000..!! வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதலமைச்சர் முக.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக 1.06 கோடி பேருக்கும், இரண்டாம் கட்டமாக நவம்பரில் 7.35 லட்சம் பேருக்கு உரிமைதொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதலே வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை கோரி 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது. தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதலே உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பித்த பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை..!! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Wed Jan 3 , 2024
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (ஜனவரி 2) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (ஜனவரி 3) அதே பகுதிகளில் நிலவுகிறது. நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, […]

You May Like