இந்தியாவின் கலாச்சாரத்திற்கு ஆபத்தானது!… கடவுளின் பெயரில் மக்களை அடக்கி வருகின்றனர்!… பாஜகவை விமர்சித்த பிரபல நடிகர்!

கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து அரசியல்வாதிகள் மக்களை அடக்கி வருகின்றனர் எனவும் இது நாட்டின் கலாச்சாரத்திற்கு மிகவும் ஆபத்தானது எனவும் நடிகர் கிஷோர் விமர்சித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்தார். இந்த விழாவில், இந்து மத குருமார்களை தவிர்த்து நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். மசூதியை இடித்து அங்கு கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழாவுக்கு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டவர்கள் சென்றனர். ராமர் கோயில் திறப்புக்கு ஆதரவாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், மதச்சார்பற்ற நாட்டில் மசூதியை இடித்துவிட்டு கோயிலை கட்டுவது சரியா என பலர் கேள்வி வருகின்றனர்.

அந்த வகையில், ராமர் கோயில் திறப்பை கடுமையாக விமர்சித்துள்ள நடிகர் கிஷோர், “கோயில், மன்னர்கள் மற்றும் அரசியலை வைத்து அடக்குவது என்பது நாம் இதுவரை பார்த்திராத ஒன்று அல்ல. இன்று நாம் மன்னர்களின் காலத்திற்கு சென்றுவிட்டதாக உணர்கிறேன். கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து, மக்களை அடக்கி வருகின்றனர்.

கோயிலை கட்டி அதில் தங்களின் பெயர்களை செதுக்கி வைத்து கொள்வது, கோயிலை கட்டிய நபர்களின் கையை வெட்டுவது, தங்களின் பெருமையை பேசி வானுயர பேனர் வைத்து கொள்வது முடிவின்றி தொடர்கிறது. அவர்களின் மக்களும் ஜோக்கர்களும் புகழ்பாடி வருகின்றனர். மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும், அவர்களை கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு எடுத்து செல்வதும் மிகவும் ஆபத்தானது. நாட்டின் கலாச்சாரத்தின் எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும், சமூக சீர்திருத்தவாதி பசவரின் வாசகத்தை மேற்கோள் காட்டிய நடிகர் கிஷோர், “செல்வம் உள்ளவர்கள் கோவில் கட்டுகிறார்கள். ஏழையான நான் என்ன கட்ட முடியும். என்னுடைய கால்களே தூண்கள். எனது உடலே கருவறை. எனது தலையே கோயிலின் ஒளிரும் குவிமாடம். எனது கடவுளான கூடலசங்கமக்கு நன்றாக தெரியும். நிலையானது அழியும். மாற்றம் என்பதே தொடர்ந்து நிலைநிற்கும்” என பதிவிட்டுள்ளார்.

Kokila

Next Post

இதய நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் அதிசய பழம்.! கொஞ்சம் சாப்பிட்டு பாருங்க.!?

Tue Jan 23 , 2024
மங்குஸ்தான் பழம், மலேசியா, இந்தோனேசியா, மியான்மர் போன்ற நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தென்னிந்திய பகுதியில் மலைப்பிரதேசங்களில் தோட்டப்பயிராக மங்குஸ்தான் பழத்தை விளைவித்து வருகின்றனர். இந்த பழம் மாதுளை பழத்தை போலவே வெளிப்புற தோல் பகுதி கடினமானதாகவும், உட்புறம் மெதுவானதாகவும் இருக்கும். மேலும் மங்குஸ்தான் பழம் மலை பகுதியில் வாழும் மக்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்த பழத்தில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது குறித்தும், இதய நோய்க்கு அருமருந்தாக […]

You May Like