கடந்த 202-ம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணி தொடர்பான சங்கரானந்த் இன்ஃப்ரா நிறுவனத்தின் டெண்டரில் முறைகேடு உள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.. இந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் நேற்று முன் தினம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை முதலே எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். சென்னை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 20 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணக்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. சோதனையின் போது மதிப்பு மிக்க ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள், நெடுஞ்சாலை துறை தொடர்பான ஆவணங்கள் சிக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது. குற்றத்தை நிரூபிக்கும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை பணி டெண்டர்களை சங்கரானந்த் இன்ஃப்ரா நிறுவனத்திற்கு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மார்ச் மாதம் எந்த பணியும் மேற்கொள்ளாமலேயே ரூ.3.23 கோடி அரசு பணம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
Read More : அமைச்சர் நிர்மல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை.. நாங்க எதுவுமே செய்யலயா..? பொங்கி எழுந்த செந்தில் பாலாஜி..!


