சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உலகத்தில் எல்லா நாளும் போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடும் இயக்கம் திராவிடர் முன்னேற்ற கழகம்.
மகளிர் தினம் மனித குலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள் மகளிர் தினம் மகளிரை வாழ்த்துவதன் மூலமாக இந்த நாட்டை நாம் வாழ்த்துகிறோம் என்று தெரிவித்திருக்கிறார். மன்னனையே கேள்வி எழுப்பும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது.
இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்பின் காரணமாக, பெண்கள் நடக்கப்பட்டார்கள் முடக்கப்பட்ட பெண்களை மீட்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் திராவிட இயக்கம் என்று கூறியிருக்கிறார். போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என்று கூறியிருக்கிறார்.