பாக்கெட் சாராய விற்பனையில் கொடி கட்டி பறக்கும் சேலம்….! 110 லிட்டர் சாராயத்துடன் வியாபாரி அதிரடி கைது…..!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் பகுதியில் சாக்கு முட்டையை வைத்து ஒருவர் கள்ளச்சாராய விற்பனை செய்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்பனை செய்வதும் சாராயம் விற்பனை செய்யும் இடத்தில் இளைஞர் ஒருவர் பாக்கெட் சாராயத்தை குடிப்பது போன்று அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.


இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் உத்தரவின் அடிப்படையில், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கு பிரிவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது வீரகனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் விவசாய நிலத்தில் சுமார் 110 லிட்டர் சாராயம் அடுக்கி வைத்திருந்த புனல் வாசல் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (40) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Next Post

ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியர்கள் வழங்கிய உற்சாக வரவேற்பு….! குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்த பிரதமர்நரேந்திரமோடி…..!

Sat May 20 , 2023
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் வரும் 24ஆம் தேதி வலையில் 6 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஜி 7 உச்சி மாநாட்டிற்காக முதலில் ஜப்பான் நாட்டிற்கு செல்லும் நரேந்திரமோடி, அங்கு நடைபெறும் இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து, அங்கிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. முதல் கட்டமாக நேற்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பின் அடிப்படையில், […]
PM Modi 12 original sixteen nine 2 2

You May Like