சவுதி அரேபியாவின் அபகா நகர் அருகே புனித மக்கா நகருக்கு உம்ரா யாத்திரை சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சவுதி அரேபியாவின் தென்மேற்கு மாகாணமான ஆசீர் பகுதியிலிருந்து உம்ரா பயணம் செல்லும் புனித யாத்திரிகர்களுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று இருக்கிறது. அந்தப் பேருந்து ஆசீர் மற்றும் அபகா ஆகிய இரு நகரங்களையும் இணைக்கும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பிரேக் வேலை செய்யாமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வேகமாக ஓடி அங்கிருந்து சுவரின் தடுப்பில் முட்டி கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்து தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது.
விபத்தின் போது கரும்புகையும் பரவியதால் பேருந்திற்கு உள்ளே இருந்தவர்களால் எளிதில் வெளியில் வர முடியவில்லை. இந்த கொடூரமான விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 29 பேர் சிறிய மற்றும் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் இந்த விபத்து தொடர்பாக சவுதி அரேபிய காவல்துறை விசாரணை செய்து வருகிறது புனித மிகு ரமலான் மாதத்தில் உம்ரா பயணம் சென்றவர்களின் பேருந்து கவிழ்ந்த 20 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களைப் பெரும் சோகத்திலும் துன்பத்திலும் ஆழ்ந்திருக்கிறது. சவுதி அரேபியா உலகில் அதிக விபத்துக்கள் நடக்கக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். அங்கு விபத்துக்களை கட்டுப்படுத்த ஏராளமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்ற போதும் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.